தொடரும் கனமழை.., இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.., வானிலை மையம் எச்சரிக்கை!!

0
தொடரும் கனமழை.., இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.., வானிலை மையம் எச்சரிக்கை!!
தொடரும் கனமழை.., இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.., வானிலை மையம் எச்சரிக்கை!!

கர்நாடக மாநிலத்தில் ஜூன் மாதத்தில் பருவமழை தாக்கம் மிக குறைந்த அளவே காணப்பட்டது. மேலும் ஜூலை மாதம் ஆரம்பித்த தென்மேற்கு பருவமழை ஆரம்பித்து நாளுக்கு நாள் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் கடந்த ஒரு வாரமாக கர்நாடக மாநிலத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் கடலோர மாவட்டங்களான தக்சின கன்னடா மற்றும் உடுப்பி, கார்வார் ஆகிய மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தக்சின கனடா, உடுப்பி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களான சிக்கமங்களூரு மற்றும் குடகு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here