சமீப காலமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவமழை பொய்த்து வருவதால், அதனை சுற்றியுள்ள அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த வகையில் தென்காசியில் குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் நேற்று (ஜூலை 5) வெள்ளப்பெருக்கு குறைந்ததால் காலை 11 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் சீறிப்பாய்ந்த அருவி நீரில் குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தமிழக மகளிருக்கான ரூ.1000 உரிமை தொகை.., இந்த நாளில் தான் வழங்கப்படுமா?? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை முதல் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி ஆகிய அருவிகளில் குளிக்க மீண்டும் தடை விதித்து இருந்தனர். இந்த நிலையில் தடை தகர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.