நாடு முழுவதும் மக்கள் தங்களது எளிய பயண வசதிக்கு பெரும்பாலும் ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். மக்களின் தேவை அறிந்து ரயில்வே நிர்வாகம் பல சிறப்பம்சங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது மக்களின் பயண நேரத்தை குறைப்பதற்கு நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள், ரயில்வே துறையால் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் உள்ளதால் பொதுமக்கள் தங்களது அவசர தேவைக்கு இந்த சேவையை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் சாமானிய மக்கள் இந்த ரயிலில் பயணம் மேற்கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
தொடரும் கனமழை.., இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.., வானிலை மையம் எச்சரிக்கை!!
அதற்குக் காரணம் வந்தே பாரத் ரயிலின் டிக்கெட் அதிகமாக உள்ளது தான். இதனால் தற்போது வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் தற்போது ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது இனி வரும் நாட்களில் வந்தே பாரத் ரயில் டிக்கெட் கட்டணத்தில் ரூபாய் 10 சதவீதம் வரை குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.