கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய ராகவேந்திரா. இவர் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா கெரியரை தொடங்கி தற்போது முன்னணி நட்சத்திரமாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் கடந்த 2007ம் ஆண்டு காவல்துறை அதிகாரி சிவராம் என்பவரின் மகளான ஸ்பந்தனாவை கல்யாணம் செய்துகொண்டார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த தம்பதிக்கு சௌர்யா என்கிற மகன் இருக்கிறான். இந்நிலையில் விஜய ராகவேந்திரா தனது மனைவி மகனுடன் சேர்ந்து தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்பந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பந்தனா “அபூர்வா” என்ற திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.