தமிழகத்தில் 1,000 புதிய அரசு பேருந்துகள்., இந்த டெண்டரை ஏற்க கூடாது? பா.ம.க. அன்புமணி விளாசல்!!!

0
தமிழகத்தில் 1,000 புதிய அரசு பேருந்துகள்., இந்த டெண்டரை ஏற்க கூடாது? பா.ம.க. அன்புமணி விளாசல்!!!
தமிழகத்தில் 1,000 புதிய அரசு பேருந்துகள்., இந்த டெண்டரை ஏற்க கூடாது? பா.ம.க. அன்புமணி விளாசல்!!!

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகத்தில் 1,000 புதிய பேருந்துகளை வாங்குவதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து பேருந்துகளை கொள்முதல் செய்ய 3 டெண்டர் அறிக்கைகளை அரசு சாலை போக்குவரத்து நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் இவை மூன்றுக்கும் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே பங்கு பெற்றிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஏற்கனவே உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் ஒற்றை ஒப்பந்த புள்ளிகளை ஏற்க கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தப் புள்ளி ஏற்கப்பட்டால், அது அநீதியான செயலாகும். எனவே இந்த ஒப்பந்தப்புள்ளியை தள்ளுபடி செய்து, மறு ஒப்பந்தப்புள்ளிகளை கோர முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட வேண்டும்.” என அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த மூன்று நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here