இந்திய சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி ஹீரோவாக இருந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் நகைச்சுவை கலந்த ஹீரோயிசம், மற்றும் இவரின் சிறப்பான டயலாக் டெலிவரியால் மக்கள் மனதில் தனி இடத்தை பெற்று வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் ரஜினி குறித்து பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் குமார் விஜய் தான் NO 1 ஹீரோ என்று கூறியிருந்தார். அதை பற்றி யூடியூபில் ஜே. பிஸ்மி என்ற பத்திரிகையாளர் தில் ராஜ் குமார் கூறியது உண்மைதான் . ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டாராகி விட்டார்.
பைனலை நோக்கி முன்னேறும் பிக் பாஸ்., Ticket to finale க்கு உயிரை கொடுத்து விளையாடும் ஹவுஸ் மேட்!!
தற்போது விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தார். இதை கேட்ட ரஜினி ரசிகர்கள் ஜே. பிஸ்மியை நேரில் சந்தித்து அவரை மிரட்டுவது போல் பேசி உள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் பலர் ஜே. பிஸ்மிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஜினியின் ரசிகர்களின் செயல் கண்டிக்கத்தக்கது என்ற கருத்தை தெரிவித்து வருகின்றனர்.