இந்தியா வந்துள்ள இலங்கை அணி, இந்திய அணிக்கு எதிராக தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட திட்டமிட்டுள்ளது. இதன் படி, டி20 தொடரின் முதல் போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில், ரோஹித், விராட் கோலி உள்ளிட்ட சில சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்க உள்ளது.
இந்திய அணியின் டி20 தொடருக்கான நிரந்தர கேப்டன் பதவி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், இலங்கைக்கு எதிரான இந்த தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி வென்றால், இவரையே நிரந்தர கேப்டனாக பிசிசிஐ நியமிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வருடத்தின் முதல் போட்டியை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால், இன்றைய போட்டியில் வலுவான பிளேயிங் லெவனை இந்தியா தேர்வு செய்ய கூடும். இந்த போட்டி நடைபெறும் மைதானமானது, சேஸிங் செய்பவர்களுக்கு அதிக வெற்றி வாய்ப்பை தர கூடியது என்பதால், டாஸ் வெல்லும் அணி பௌலிங்கை தேர்வு செய்யும். இதனால், பேட்டிங் வரிசை பலப்படுத்தும் வகையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் இந்திய அணியின் பிளேயிங் லெவன்:
இஷான் கிஷன், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா(சி), சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.