இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மொபைல் ரீசார்ஜ் கடைகளும் பூட்டப்பட்டு உள்ளதால் தங்களின் ஒரே பொழுதுபோக்காக உள்ள மொபைல் போனிற்கு ரீசார்ஜ் செய்ய முடியமால் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
ஜியோவின் புதிய வசதி..!
ஜியோ பயனர்கள் தங்களின் மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்ய தங்கள் அருகில் உள்ள ஏடிஎம் மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்து உள்ளது. இந்த புதிய அறிவிப்பால் இனிமேல் பயனர்கள் ரீசார்ஜ் செய்வதற்கு கடைகளை தேடி அலையத் தேவையில்லை.
ஆக்ஸிஸ், டிபிசி, ஹச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., எஸ்பிஐ, ஐடிபிஐ மற்றும் ஐடிஎப்சி போன்ற பெரும்பாலான ஏடிஎம் மெஷின்களில் ரீசார்ஜ் செய்ய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவால் இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |