ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 இல் முட்டாள்கள் தினம் கொண்டாடப்படும். இந்த தினங்களில் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் பொய் சொல்லி ஏமாற்றியோ அல்லது முட்டாளாக்கியோ மகிழ்வோம். தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனா வைரஸை வைத்து சமூக ஊடகங்களில் மக்களை முட்டாளாக்கும் நையாண்டி பதிவுகளை பரப்ப கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஏப்ரல் பூல்
இந்நிலையில் மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் முட்டாள்கள் தின நகைச்சுவை அல்லது சமூக ஊடகங்களில் நையாண்டி என்ற பெயரில் கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளையோ அல்லது தவறான தகவல்களையோ பரப்ப வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
9 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு, 42 ஆயிரத்தை தாண்டிய பலி – இந்தியாவின் நிலைமையும் பரிதாபம்..!
இது தொடர்பாக புனே காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில். “ஏப்ரல் 1 ஆம் தேதி, நண்பர்கள், உறவினர்கள் ஒருவருக்கொருவர் புரளி பரப்புவதன் மூலம் ஒருவருக்கொருவர் பாதிப்பில்லாத சேட்டைகளை விளையாடுகிறார்கள். இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில், கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்படடுள்ளது.
போலீஸ் அதிகாரி எச்சரிக்கை..!
புனே ஊரகப்பகுதி காவல்துறை துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி நாராயண் ஷிர்காவ்கர் வெளியிட்ட செய்தியில் “இந்த சூழலில் மக்கள் எதையும் பரப்பக்கூடாது. வைரஸ் பற்றி பொய்யான தகவல்கள் அல்லது செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பினாலோ அல்லது ஊரடங்கு குறித்து தவறான வதந்திகள் பரப்பினாலோ, மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும் ஊரடங்கை மக்கள் மீறும் நிலை உருவாகும். எனவே அத்தகைய செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது “என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |