தமிழகத்தில் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் அவர்களின் பொழுதுபோக்கிற்காக டிவி சேனல்கள் தங்களுடைய பழைய மற்றும் பிரபலமான நிகழ்ச்சி மற்றும் சீரியல்களை ஒளிபரப்ப தொடங்கி விட்டன.
சன் டிவி மெட்டி ஒலி..!
சினிமா படப்பிடிப்புகள் முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் வரை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதால் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஸ்டாக் இல்லாதால் அதன் முந்தைய எபிசோடுகளை சேனல்கள் ஒளிபரப்ப தொடங்கி விட்டன. பல சேனல்கள் பழைய, பிரபலமான தொடர்களை ஒளிபரப்ப தொடங்கி விட்டன.
அந்த வகையில் சன் டிவி தனது பிரபல மெட்டிஒலி தொடரை மீண்டும் ஒளிபரப்ப உள்ளது. தினமும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது. விஜய் டிவி கலக்கப்போவது யாரு மற்றும் சரவணன் மீனாட்சி தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப தொடங்கி விட்டது. டிடி நேஷனல் தொலைக்காட்சி ராமாயணம் மற்றும் சக்திமான் தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப தொடங்கி விட்டது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |