இந்தியாவில் பரவி வரும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அனைவரும் 21 நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சினிமா துறையிலும் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டதால் நடிகர் நடிகைகளும் வீட்டிலேயே உள்ளனர். இந்நிலையில் நடிகை அதுல்யா ரவி சகோதரரின் முடியை பிடித்து சண்டை போடும் வீடியோ பரவி வருகிறது.
குவாரண்டைன் காலம்
ஊரடங்கு காரணமாக நடிகைகள் மற்றும் நடிகர்கள் வேலையின்றி வீட்டில் உள்ளனர். அவர்கள் தங்களின் குவாரண்டைன் காலத்தை எப்படி கழிக்கிறார்கள் என்பது குறித்து நாள்தோறும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் வீடு வேலை செய்வது போலவும், சிலர் உடற்பயிற்சி செய்வது போலவும் வீடியோ வீடியோ வெளியிடுகின்றனர்.
அதுல்யா ரவி
நடிகை அதுல்யா ரவி கோயம்புத்தூரை பூர்விகமாக கொண்டவர். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை கேப்மாரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் நாடோடிகள் 2 படம் வெளியானது. தற்போது வட்டம் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை அதுல்யா ரவி தன்னுடைய குவாரண்டைன் காலம் குறித்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில் தன்னுடைய சகோதரருடன் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார் அதுல்யா, இருவரும் ஒருவர் முடியை ஒருவர் மாற்றி மாற்றி பிடித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் சண்டை போட்டு வருகின்றனர்.
அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அதுல்யா, 5வது நாளே நானும் என் தம்பியும் சண்டை போட ஆரம்பித்து விட்டோம் என பதிவிட்டுள்ளார். மேலும் இது செல்லமான விளையாட்டு சண்டைதான் என குறிப்பிட்டுள்ளார். மேலும் குடும்பம் என்று வரும் தனக்கு லாஜிக்கும் இல்லை முதிர்ச்சியும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். நாங்கள் எப்போதும் இப்படிதான் விளையாடுவோம் சண்டை போடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார் அதுல்யா ரவி.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |