கூகுள் உடன் இணைந்து JioPhone Next என்ற உலகின் மலிவு விலை ஸ்மார்ட் போனை செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் விற்பனை செய்ய உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து இந்த ஸ்மார்ட் போனை உருவாகியுள்ளன. இதை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் நேற்று (ஜூன் 24,2021) நடந்த 44-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தெரிவித்தார். மேலும் அவர் சர்வதேச அளவில் குறைந்த விலையுள்ள 4ஜி ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த புதிய ஸ்மார்ட் போனை வரும் விநாயகர் சதுர்த்தி (செப்டெம்பர் 10,2021) அன்று முதல் விற்பனை செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கான ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை ஜியோ மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கி வருகிறது. இதன் மூலம் ஜியோ இந்தியாவில் 2ஜி சேவை முடிவுக்கு கொண்டு வர ஜியோ திட்டமிட்டுள்ளது.
மேலும் நாட்டில் 5ஜி சேவையை பயன்பாட்டுக்கு கொண்டுவர ஜியோ நிறுவனமானது கூகுள்,பேஸ்புக், மைக்ரோ சாப்ட் போன்ற நிறுவங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன்மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வேகமாக இணைய சேவை கிடைக்கும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்