கொரோனா வைரஸ் உலகெங்கிலும் பெரும் பாதிப்பையும் உயிர் சேதத்தையும் பயங்கரமாக ஏற்படுத்தியுள்ளது.இதுவரை கொரோனா காரணமாக ஒரு லட்சம் பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்,வைரஸை தடுக்க உலகம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ‘சானிடைசர்’ எனப்படும் கிருமி நாசினி மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் கிருமி நாசினிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சானிடைசர்க்கு பதில் வோட்கா
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சானிடைசர்க்கு பதிலாக ஆல்கஹாலை பயன்படுத்தக போவதாக ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.ஜப்பானிலும் தற்போது கிருமி நாசினிக்கு தட்டுப்பாடு இருக்கிறது. ஒவ்வொரு கிருமி நாசினியிலும் 70 முதல் 80 சதவீத ‘ஆல்கஹால்’ பயன்படுத்தப்படுகிறது. சில கிருமி நாசினியில் 40 சதவீத ‘ஆல்கஹால்’ பயன்படுத்தப்படுகிறது. எனவே கிருமி நாசினிக்கு பதிலாக ஆல்கஹாலையே நேரடியாக பயன்படுத்த ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி மதுபானங்களில் ஒருவகையான வோட்காவை கிருமிநாசினியாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கிருமி நாசினியை விட நேரடியாக பயன்படுத்தப்படும் வோட்காவுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் என்று கூறப்படுகிறது. எனவே வோட்காவை நேரடியாக பயன்படுத்துவதைவிட அதனை தண்ணீருடன் கலந்து கைகளை சுத்தம் செய்து பயன்படுத்த ஜப்பான் அரசு அறிவுறுத்தியுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |