“என்னதிது.. நம்ம நடந்தா அவனும் நடக்கிறான்.. நம்ம சிரிச்சான் அவனும் சிரிக்கிறான். இப்போ நாம நிக்கிறதா, ஓடுறதான்னு தெரியலையே” வடிவேலுவின் வசனமும் கலக்கல் காட்சியும் இணைந்த இந்த வீடியோவை திருப்பூர் போலீசார்கள் வெளியிட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..
ட்ரான் கேமரா மூலம் கண்காணிப்பு..!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு வருகின்றனர். அத்துமீறி வெளியே வருபவர்களை போலீசார் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் போலீசார் ட்ரோன் கேமரா மூலமாகவும் மக்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
வடிவேல் டயலாக் உடன் வைரல் வீடியோ..!
ஊத்துக்குளி சாலை மண்ணரை பகுதியில் சிறுவர்கள் கிட்டத்தட்ட 10 பேர் சேர்ந்து கேரம் போர்ட் விளையாடி கொண்டிருந்ததை கண்டனர். டிரோனை பார்த்ததும் சிறுவர்கள் அலறி அடித்து கொண்டு சிதறி ஓடினர். இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.
இந்த காட்சிகளைதான் திருப்பூர் போலீசார் வெளியிட்டுள்ளனர். இது எச்சரிக்கை விழிப்புணர்வுக்காகதான் வெளியிட்டுள்ளனர் என்றாலும் அடடடா ..சூப்பரே சூப்பரே ..நொறுக்குதே நொறுக்குதே ..கலக்குதே.. ஜல்லிக்கட்டு பேச்சடன் மற்றும் மானே, தேனே போன்ற அம்சங்களை சேர்த்து வடிவேலு டயலாக்கையும் சேர்த்து வெளியிட்டுள்ளனர்.
“என்னதிது.. நம்ம நடந்தா அவனும் நடக்கிறான்.. நம்ம சிரிச்சான் அவனும் சிரிக்கிறான்.. இப்போ நாம நிக்கிறதா, ஓடுறதான்னு தெரியலையே”.. வடிவேலுவின் வசனமும் கலக்கல் காட்சியும் இணைந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |