Sunday, May 12, 2024

வங்கி கணக்குடன் ஆதாரை இணைத்தால் ரூ.5000 – மத்திய அரசின் “ஜன் தன் யோஜனா” திட்டம்!!

Must Read

வங்கி கணக்கை ஆதார் கார்டுடன் இணைத்தால் ஒருவர் ஓவர் டிராப்ட் முறையில் 5000 ரூபாய் வரை பணத்தினை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதார் கார்டுடன் இணைப்பு:

நாட்டில் உள்ள அனைவரும் வங்கி கணக்கினை வைத்திருக்க ஊக்குவிக்க வேண்டும் என்று நரேந்திர மோடி தலைமையில் 2014 ஆம் ஆண்டு ‘ஜன் தன் யோஜனா’ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் மூலமாக நாட்டில் உள்ள 7 கோடி குடும்பத்தினர் வங்கி கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகளும் வழங்கப்படுகின்றன.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் வழங்கும் நிதி உதவிகளும் இந்த கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகின்றன. இந்த வங்கி கணக்கில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. அது, இந்த கணக்கை நீங்கள் வைத்திருந்தால், உங்கள் கணக்கில் பணம் இல்லையென்றால் கூட நீங்கள் 5000 ரூபாய் வரை ஓவர் டிராப்ட் முறையில் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு சில நிபந்தனைகளும் உள்ளது.

பின்பற்ற வேண்டியது:

இந்த சிறப்பு அம்சங்கள் மற்றும் பயன்களை பெற முதலில் நீங்கள் சிலவற்றை பின்பற்ற வேண்டும். அது என்னவென்றால்,

  • முதலில் உங்களுக்கு இந்த திட்டம் மூலமாக ஒரு புதிய கணக்கினை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
  • இந்த கணக்கு தொடங்க ஆதார் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பேன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, 100 நாள் வேலைத்திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை தெரிவித்தல் அவசியம்.
  • இந்த கணக்கு ஆரம்பிக்கப்பட்டதும், டெபிட் கார்டு கண்டிப்பாக பெற்று இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 6 மதத்திற்கு குறிப்பிட்ட தொகையினை முறையாக பராமரித்தல் வேண்டும்.
  • அடிக்கடி பண பரிவர்த்தனை நடைபெற்று இருத்தல் அவசியம்.
  • ஆதார் எண்ணை இந்த கணக்குடன் இணைத்து இருப்பது மிகவும் அவசியமான ஒன்று.

இது போன்ற நிபந்தனைகளை சரியாக பின்பற்றி செய்தால் உங்களால் 5000 ரூபாய் வரை பெற முடியும். அருகில் உள்ள உங்களது வங்கி கிளைக்கு சென்று இந்த திட்டம் மூலமாக புதிய கணக்கினை தொடங்கலாம். அரசின் நலத்திட்டங்கள் இந்த கணக்கின் மூலம் கிடைப்பதால் இடைத்தரகர்களின் சுரண்டல் போன்ற தொந்தரவுகள் இருக்காது.

- Advertisement -

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -