அண்மைக்காலமாக காதல், லிவிங் டூகெதர் போன்ற உறவுகளில் இருப்பவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் அவ்வப்போது தகராறுகள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டை சேர்ந்த காதல் தம்பதிகள் இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையால் காதலியை 57 முறை கத்தியால் குத்தி காதலன் கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்து 2022 ஆம் ஆண்டு சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் சிறையில் இருக்கும் அந்த நபர் ஒரு வருடத்தில் 80 கிலோ வரை உடல் எடை அதிகரித்துள்ளார். மேலும் அவரின் உடல் எடையை குறைக்க கலோரிகள் குறைந்த உணவை கொடுக்க சிறை நிர்வாகத்தால் முடியாது என்பதால் அவருக்கு விடுதலை கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.