உலகில் நாளுக்கு நாள் கொலை உள்ளிட்ட கொடூர சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் மதுரவாயல் பகுதியில் ஒரு தாய் மகனுக்கு செய்த காரியம் அனைவரையும் பதை பதைக்க வைத்துள்ளது. அதாவது, மதுரவாயல் அடுத்த புளியம்பேடு பகுதியை சேர்ந்தவர் தான் அரி(45). அவருடைய மனைவி செல்வி(38). இந்த தம்பதியருக்கு பூவரசன்(21) என்ற மகன் இருக்கிறார். பூவரசன் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் நேற்று அரி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற போது அவரது மனைவியும் மகனும் ரத்த காயங்களுடன் வீட்டில் கிடந்துள்ளனர். அதை பார்த்த அரி உடனே காவல் துறைக்கு தெரிவித்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று மகனுக்கும் அம்மாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மகன் பூவரசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட அனுமதிக்க கூடாது., அரசின் அதிரடி அறிக்கை!!!
தீவிர சிகிச்சையில் அம்மா இருக்கும் பொழுது காவல்துறை விசாரணை செய்தனர். அப்போது அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அதாவது கடுமையான மன அழுத்தத்தில் இருந்த தாய் செல்வியே தனது மகன் பூவரசனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு, தன்னை தானே இரும்பு கம்பியால் தாக்கி கொண்டது தெரியவந்தது. இதனால் அவரை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது.