இஸ்ரோ வரும் ஆண்டுகளில் புதிதாக 10 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டு உள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே அறிய இந்த செயற்கைகோள்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இது குறித்த விபரங்கள் விண்வெளி துறையின் ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட உள்ளன.
என்னென்ன செயற்கைகோள்கள்..?
ரூ. 800 கோடி மதிப்பில் 2 அதிநவீன ஜியோ இமேஜிங் செயற்கைக் கோள்கள் பருவநிலை கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக பயன்படுத்தபட உள்ளன. ஜிஅய்சாட்- 1 மார்ச் மாதமும், ஜிஅய்சாட்-2 ஜூன் மாதமும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளன.
இஸ்ரோவின் அடுத்த 36 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த மத்திய நிதி அமைச்சகம் ரூ .13,480 கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கணித்து, போதுமான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் கவனமாக மேற்கொள்ளவும், பேரிடர் மீட்பு பணிகளுக்கும் இந்த புதிய செயற்கைகோள்கள் பயன்படுத்த பட உள்ளன.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |