ராணுவ பணிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் நிரந்தர உயர் பதவி – உச்சநீதிமன்றம் உத்தரவு..!

0

இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கும் ஆண்களைப் போல உயர் பதவிகள் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மத்திய அரசு மேல்முறையீடு..!

2010ம் ஆண்டு ஒரு வழக்கு விசாரணையில் டெல்லி உயர் நீதிமன்றம் ராணுவத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கு நிகராக உயர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மத்திய அரசு மேல் முறையீடு செய்தது. மத்திய அரசின் வாதத்தில் கிராமப்புறங்களில் இருந்து ராணுவத்திற்கு வரும் ஆண்கள் பெண் அதிகாரிகளை உயர் பதவிகளில் நியமிப்பதை ஏற்றுக்கொள்வதில்லை.

மேலும் பெண்கள் ஆண்களுடன் ஒப்பிடும் போது உடல் வலிமையில் சற்று குறைந்தவர்களாக இருப்பதால் அவர்களுக்கு படையை வழிநடத்தும் அளவிற்கு திறன் இருக்காது. குடும்பப் பணிகளிலும் பெண்கள் ஈடுபட வேண்டும் என்பதால் அவர்களுக்கு நிரந்தர பதவி வழங்க முடியாது என்று கூறியது.

நீதிபதிகள் எதிர்ப்பு..!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆண்களை விட பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற பாலின பாகுபாட்டை வலியுறுத்துவதாக மத்திய அரசின் வாதங்கள் இருந்ததாக தெரிவித்தனர். மேலும் இது சாதிக்கும் பெண்களை மட்டுமின்றி ராணுவத்தையும் அவமதிக்கும் செயல் என்று கூறி ஆண்களுக்கு நிகராக பெண்களையும் ராணுவத்தில் உயர் பதவிகளில் அமர்த்த வேண்டும் என தீர்ப்பளித்தனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here