தொடர் தோல்வியில் சிக்கி தவிக்கும் சென்னை…, கேரள அணி திரில் வெற்றி!!

0
தொடர் தோல்வியில் சிக்கி தவிக்கும் சென்னை..., கேரள அணி திரில் வெற்றி!!
தொடர் தோல்வியில் சிக்கி தவிக்கும் சென்னை..., கேரள அணி திரில் வெற்றி!!

நாக் சுற்றை எதிர்நோக்கி நடைபெற்று வரும் இந்தியன் சூப்பர் லீக் தொடரில், சென்னை அணியை, கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியன் சூப்பர் லீக் தொடர் 11 அணிகளுக்கு இடையே கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா 2 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றன. லீக் சுற்றுகள், அனைத்தும் இந்த மாத இறுதியுடன் முடிவடைய உள்ளதால், தற்போது நாக் அவுட் சுற்றை எதிர்நோக்கி போட்டிகள் நடைபெறுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த வகையில், நேற்று, சென்னையின் FC அணியானது கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில், ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்திலேயே, சென்னை அணியின் அப்தனாசர் எல் கயாதி கோல் ஒன்றை அடித்து அசத்தினார். இதனை தொடர்ந்து, 38 வது நிமிடத்தில், கேரளா அணியின் அட்ரியன் லூனா ஒரு கோல் அடிக்க, ஆட்டத்தின் முதல் பாதியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது.

T20 உலக கோப்பைக்கு தயாராகும் இந்தியா…, பங்களாதேஷிற்கு எதிராக இன்று கடைசி ஆட்டம்!!

இதையடுத்து தொடங்கப்பட்ட, 2வது பாதியில், 64 வது நிமிடத்திலேயே, கேரளா அணியின் ராகுல் கேபி ஒரு கோல் அடித்தார். இதன் பிறகு, சென்னை அணி பல முறை கோல் அடிக்க முயன்ற போதும், தோல்வியிலேயே முடிந்தது. இதனால், ஆட்ட நேர முடிவில், கேரளா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 31 புள்ளிகளுடன் 3வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. இந்த போட்டி மூலம் தொடர் தோல்வியை சந்தித்து வரும் சென்னை அணி 18 புள்ளிகளுடன் 8 வது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here