தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம், தன் திரையுலக வாழ்க்கையில் தனக்கு நேர்ந்த பல முக்கியமான விஷயங்களை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விக்ரம் உருக்கம் :
தமிழ் சினிமாவில் சியான் என செல்ல பெயர் வைத்து அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு பின், இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், விக்ரம் பேட்டி ஒன்றில் பேசிய போது, பத்தாண்டுகள் வரை எனக்கு திரைத்துறையில் எந்த படமும் செட் ஆகவில்லை.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
நான் நடித்த எல்லா படமும் ப்ளாப் தான். அதன் பிறகு தான் எனக்கு, சேது படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்திற்கு பின், எனக்கான மார்க்கெட் எகிறியது. கிட்டத்தட்ட அந்த படத்திற்காக மட்டும் 18க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளேன்.
மீனாவோட Crush இந்த நடிகர் தான்? அவரே சொன்ன ஷாக்கிங் சீக்ரெட்ஸ்! இவ்ளோ ஓப்பனா பேசிட்டாங்க!!
ஒரு தடவை டீக்கடைக்கு பின்னால் இருக்கும், ஒரு சின்ன வரவேற்பு கூடத்தில் வைத்து ஒரு விழா நடத்தி அதில் கூட எனக்கு அவார்ட் கொடுத்தார்கள். அந்த விருதை வாங்குவதற்காக சந்து பொந்தெல்லாம் தேடி ஓடினேன். ஏனென்றால் விருது எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். அப்படியெல்லாம் பாடுபட்டு தான் சினிமாவில் இந்த இடத்தை அடைந்து இருக்கிறேன் என உருக்கமாக பேசியுள்ளார்.