இனித்த – சீனா லடாக் எல்லை பிரச்சனை பெருமளவில் இருப்பதால் இந்த நிலையில் சீன நிறுவனமான விவோ ஐபிஎல் தொடரின் ஸ்பான்சராக இருப்பது பற்றி பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
இந்திய அரசு & வங்கிகள் இணையதளத்தை ஹேக் செய்ய சீனா முயற்சி – இந்தியா முறியடிப்பு..!
விவோ ஐபில் ஸ்பொன்சஷிப் ரத்தா ?
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இந்திய – சீனா லடாக் எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்குள் ஏற்பட்ட தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சீனா திட்டமிட்டே இந்தியா மேல் தாக்குதல் நடத்தியது,இதனால் இந்தியாவில் சீனாவுக்கு எதிரான கருத்துகள் தொடர்ந்து அதிக அளவில் கூறிவருகின்றன. இதானால் இந்தியாவில் சீனா பொருட்களைப் பயன்படுத்துவதை இந்தியர்கள் அனைவரும் தவிர்க்கவேண்டும் எனவும் சீனப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும் சமூகவலைத்தளங்களில் கருத்துகள் சொல்லியும் கூறியும் வருகின்ற எனவே இதெல்லாம் கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரில் விவோ வான சீன நிறுவனத்தின் ஸ்பான்சராக தொடர்வது குறித்து பிசிசிஐ விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
பிசிசிஐ விளக்கம்
பிசிசிஐ யிடம் விவோ ஸ்பான்சர்ஷிப் பற்றி பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிசிசிஐ யின் பொருளாளர் அருண் துமால் இதுபற்றி இன்னும் எதுவும் தீர்மானிக்கப்படவில்லை.சீன நிறுவனங்களுக்கு உதவுதலுக்கும் சீனநிறுவனத்திடமிருந்து பயன்பெறுவதற்கும் வித்தியாசம் உள்ளது.அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இந்திய நுகர்வோரிடமிருந்து சீன நிறுவனம் பணம் சம்பாதிக்கிறது பின்னர் அதில் ஒரு பங்கை பிசிசிஐக்கு ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் செய்வதற்காகச் செலுத்துகிறது.அவர்களிடமிருந்து பெறும் பணத்திற்கு பிசிசிஐ 42% வரி செலுத்துகிறது.எனவே இது நம் நாட்டுக்குச் சாதகமானதுதானே தவிரச் சீனாவுக்குச் சாதகமானதல்ல” எனத் தெரிவித்துள்ளார்.