இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது கடந்த நேற்று மிகப் பிரமாண்டமாக தொடங்கப்பட்டு சிறப்பாக அரங்கேறி வருகிறது. நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி படைத்து இருக்கும் சாதனை குறித்து காணலாம்.
அதாவது ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் அவுட் செய்த வீரர் என்ற பெருமையை எம்.எஸ் தோனி பெற்றுள்ளார். 42 வயதான தோனி முட்டியில் காயத்தை வைத்து கொண்டே இந்த அளவிற்கு அதிரடியாக செயல்படுவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.