கர்நாடகாவில் 5, 8, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கொண்டு வர அம்மாநில அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனியார் பள்ளி கூட்டமைப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், பொதுத்தேர்வு நடத்தும் முறைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்ததில், நீதிமன்றத்தின் தடை ரத்து செய்யப்பட்டதோடு உரிய ஆலோசனை மேற்கொண்டு பொதுத்தேர்வு நடத்த உத்தரவிட்டனர்.
IPL வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த எம்.எஸ் தோனி…, வெளியான முக்கிய அப்டேட்!!
அதன்படி நாளை மறுநாள் (மார்ச் 25) திங்கள்கிழமை முதல் 5, 8, 9 ஆம் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த தேர்வை கர்நாடக முழுவதும் 28 லட்சம் மாணவர்கள் எழுதுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.