இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17 வது சீசன் இன்னும் 2 நாட்களில் பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இந்த முறை, இத்தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலேயே நடைபெற உள்ளதால், ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டம், சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மார்ச் 22ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை முன்னறிவிப்பின்படி போட்டியின் போது மழை குறுக்கிடாது என்று தகவல் வெளியாகியுள்ளது
அதாவது சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், அதிகபட்ச வெப்பநிலை 36 C மற்றும் குறைந்தபட்சம் 34 C என்று வானிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 16 கிமீ / 11 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போட்டி நடைபெறும் நாள் முழுவதிலும் மழை அச்சுறுத்தல் இருக்காது எனவும் தெரிகிறது. இதனால் வரும் வெள்ளிக்கிழமை தடையற்ற போட்டியை எதிர்பார்க்கலாம்.