நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், அரசியல் கட்சிகள் பலரும் கூட்டணி தொகுதி பங்கீடுகளை விரைந்து மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கைகோர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளதாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தற்போது அறிவித்துள்ளார்.
IPL 2024 : CSK vs RCB போட்டியில் மழை குறுக்கீடு இல்லை.. வானிலை அறிக்கை வெளியீடு!!
இது தொடர்பாக அவர் கூறுகையில், “நாட்டின் நலனுக்காக பிரதமர் மோடி தலைமையிலான நல்லாட்சியே தொடர வேண்டும். தமிழகத்திலும் திமுக, அதிமுக என இல்லாமல் மாற்றங்கள் வர வேண்டும். இதனால் வரும் மக்களவை தேர்தலில் பாஜக சார்பாக 10 தொகுதியில் பா.ம.க. போட்டியிட முடிவு செய்துள்ளது. எங்கள் கூட்டணி வெற்றி பெற்று, 3வது முறையாக மீண்டும் மோடி தான் பிரதமராக வருவார்.” என தெரிவித்துள்ளார்.