தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பண்டிகை தினங்களில் சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு உத்திரபிரதேசத்தில் அந்தியோதயா ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு, அரிசி, கோதுமையுடன் தினை, சோளம் மற்றும் சர்க்கரை விநியோகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.
IPL 2024 : CSK vs RCB போட்டியில் மழை குறுக்கீடு இல்லை.. வானிலை அறிக்கை வெளியீடு!!
அதன்படி தகுதியான ஒரு கார்டுக்கு 14 கிலோ அரிசி, 14 கிலோ கோதுமை, ஐந்து கிலோ தினை, ஒரு கிலோ ஜோவர், ஒரு கிலோ மக்காச்சோளம், 18 ரூபாய் வீதம் மூன்று கிலோ சர்க்கரை ஆகியவை மார்ச் 15 முதல் 29 வரை வழங்கப்பட உள்ளது. அப்படி ரேஷன் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டால் மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகம், வட்டார உணவு அலுவலரிடம் புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.