பிரபல தனியார் நிறுவனமான இன்போசிஸ் எடுத்த நடவடிக்கையால் இந்தியாவில் ஐடி துறைக்கு பெரும் ஆபத்து ஏற்பட உள்ளது.
இன்போசிஸ் நடவடிக்கையால் ஐடி துறைக்கு பெரும் ஆபத்து..!
இந்தியாவில் தற்போது முன்னனி நிறுவனமான இன்போசிஸ் புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதாவது கொரோனா தொற்றால் IT ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டது. தற்போது தொற்றின் பரவல் முழுவதுமாக குறைந்துவிட்ட நிலையில் ஊழியர்களை மீண்டும் பணி செய்ய அலுவலகம் வரும்படி அனைத்து நிறுவனங்களும் அழைக்கின்றன.
ஆனால் இன்போசிஸ் மட்டும் ஊழியர்களின் விருப்பம் என்று அறிவித்து விட்டது. மீண்டும் அலுவலகம் செல்ல விருப்பமில்லாத ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்வதால் இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்நிறுவனத்தில் பணியமர திட்டமிடுவதாக ஒரு ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. இது TCS, WIPRO போன்ற மற்ற நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இது போதாக்குறைக்கு மூன்லைட் முறையை அனைவரும் எதிர்க்கும் நிலையில் இன்போசிஸ் மட்டும் பிரீலான்சிங் முறையை அமல்படுத்தி உள்ளது. இதனால் மற்ற நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். இன்போசிஸ் நிறுவனத்தின் இத்தகைய அதிரடி நடவடிக்கைகளால் இந்திய IT துறையே ஸ்தம்பித்து உள்ளது.