கொரோனா வைரஸ் தொற்று குறித்து தமிழ்நாட்டில் 17 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள ஆய்வகங்களில் சோதனை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வரும் காலங்களில் ஆய்வகங்களில் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில்:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் கொரோனா சோதனை செய்யும் மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை தமிழகத்தில் 17 ஆய்வகங்களில் கொரோனா சோதனை செய்து கொள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.
அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள்:
சென்னையில் கிண்டி கிங்ஸ் ஆய்வகம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, திருவாரூர், தேனி, நெல்லை, மதுரை, கோவை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஆய்வகங்கள் உள்பட 11 அரசு ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.
சென்னையில் 9 இடங்களுக்கு ‘கொரோனா ரெட் அலெர்ட்’ – மக்களை எச்சரித்த தமிழ்நாடு அரசு..!
கோவை வடவள்ளியில் உள்ள மைக்ரோ பயாலஜிக்கல் ஆய்வகம், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை, சென்னை போரூர் ராமச்சந்திரா ஆய்வகம், கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை, ராயப்பேட்டையில் உள்ள நியுபெர்க் எர்லிச் ஆய்வகம், தரமணியில் உள்ள ஒய்.ஆர்.ஜி. சென்டர் என 6 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |