கொரோனா வைரஸ் காரணமாக 2020 ஐபிஎல் தொடர் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் ஷேர் மதிப்பு சரிவின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை இழந்துள்ளது.
ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்பு குறைவு..!
கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த சில நாட்களில் பல மடங்காக மாறி உள்ளது. 1600க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் மார்ச் 29 அன்று துவங்க வேண்டிய ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த திட்டம் என்ன என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இந்த நிலை திடீரென மாறாது என்பதால் ஐபிஎல் தொடர் அடுத்த சில மாதங்கள் வரை நடைபெறுவது கடினமே.
விலையில் முன்னேற்றம்..!
கடந்த சில மாதங்கள் முன்பு ஒரு ஷேரின் விலை 30 ரூபாயாக இருந்தது. அப்போது சிஎஸ்கே அணியின் ஷேர் மொத்த மதிப்பு 1,000 கோடியாக இருந்தது. இது அந்த அணியின் பிராண்ட் மதிப்பு உச்சத்தை எட்டியதை உணர்த்தியது.
நவம்பர் 2018இல் சிஎஸ்கே அணியின் ஒரு ஷேர் விலை ரூ.13 முதல் 15 வரை இருந்தது. அப்போது மொத்த ஷேர் மதிப்பு 450 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சிஎஸ்கே அணியின் ஷேர் மதிப்பு மேலும் உயர்ந்தது.
200 கோடி சரிவு..!
கடந்த சில மாதங்கள் முன்பு ஒரு ஷேரின் விலை 30 ரூபாயாக இருந்தது. அப்போது சிஎஸ்கே அணியின் ஷேர் மொத்த மதிப்பு 1,000 கோடியாக இருந்தது. இது அந்த அணியின் பிராண்ட் மதிப்பு உச்சத்தை எட்டியதை உணர்த்தியது.
இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணியின் ஷேர் 24 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆகி வருகிறது. ஒரு ஷேருக்கு 6 ரூபாய் சரிந்துள்ள நிலையில், மொத்த ஷேர் மதிப்பு தடாலடியாக 200 கோடி குறைந்து 800 கோடி ஆகி உள்ளது. சிஎஸ்கே அணியின் ஷேர் மதிப்பு இத்தனை வேகமாக சரிய முக்கிய காரணம் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்பது தான்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |