பிப்., 24 இல் இந்தியா & இங்கிலாந்து இடையே பகலிரவு டெஸ்ட் போட்டி – பிசிசிஐ தகவல்!!

0

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி 20 ஆகிய விளையாட்டுகளில் விளையாடி வருகிறது. முன்னதாக சிட்னியில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இங்கிலாந்து – இந்தியா அணிக்கான பகலிரவு டெஸ்ட் போட்டி பிப்ரவரி 24-ம் தேதி குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கிரிக்கெட் மைதானத்தின் உள்ளூர் அரங்கத்தை திறந்து வைக்கும்போது அவர் இத்தகவலை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாது,”இந்தியா இங்கிலாந்து அணிக்கான முதல் டெஸ்ட் தொடர் பிப்ரவரி 7 அன்று தொடங்கும், பிப்ரவரி 24 அன்று பகலிரவு டெஸ்ட் ஆட்டம் அஹமதாபாத் மோடேரா மைதானத்தில் நடைபெறும் மேலும் 5 கிரிக்கெட் ஆட்டங்களும் மோடேரா மைதானத்தில் தன நடைபெறும்” என்று தெரிவித்தார்.

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா??

உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானமாக மோடேரா மைதானம் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒரே நேரத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here