Friday, March 29, 2024

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா?? – மத்திய அமைச்சர் விளக்கம்!!

Must Read

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை 20 சதவீதம் அளவில் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷான்க் தெரிவித்துள்ளார். அதே போல் ஆண்டு ஆண்டு நடைபெற இருக்கும் நீட் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு 2021:

இந்த ஆண்டு கொரோனா பரவல் அச்சம் காரணமாக மே மாதம் நடைபெற இருந்த நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதுவும் பலரது எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் தேர்வுகள் நடைபெற்றது. தேர்வுகளுக்கான முடிவுகளில் தமிழகத்தில் அரசு வழி பயிற்சி நிறுவனங்களில் படித்த மாணவர்கள் பலரும் தேர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களின் கேள்விகளுக்கு ஆன்லைன் வாயிலாக பதிலளித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், பேசிய போது அவர் கூறியதாவது, “கொரோனா பரவல் காரணமாக பல பயிற்சி நிறுவனங்கள் திறக்கப்படவில்லை, அதே போல் 2021 ஆம் ஆண்டிற்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடைபெற சில மாதங்களே உள்ளன. மாணவர்களின் நலன் கருதி நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை 20 சதவீதமாக குறைக்க மத்திய கல்வி அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது. அன்றைய சூழலை பொறுத்து முடிவு எடுக்கப்படும். தற்போது மாணவர்கள் அனைவரும் நேரடியாக தான் தேர்வுகளை எழுதுகின்றனர்”

இன்றும், நாளையும் வறண்ட வானிலையே காணப்படும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

“வேண்டுமென்றால், அவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வுகளை நடத்தவும் திட்டம் உள்ளது. நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளில் மாணவர்கள் மறுமுறை தேர்வெழுதவும் வாய்ப்புகள் வழங்க திட்டம் உள்ளது” இவ்வாறாக தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடைபெறும் தேதியினை அவர் தெரிவிக்கவில்லை.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக குடும்ப தலைவிகளே., உரிமைத் தொகை ரூ,1,500ஆக உயரும்? பாஜக அண்ணாமலை வாக்குறுதி!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -