ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதல் T20 போட்டிக்கான உத்தேச ப்ளெயிங் 11 பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
உத்தேச ப்ளெயிங் 11
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் T20 போட்டி நாளை மொகாலியில் நடைபெற உள்ளது. இதனால் இந்திய அணிக்கான ப்ளெயிங் 11 னில் யார் களமிறங்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
ஆனால் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரில் ஒருவருக்கு தான் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும். இதில் ரிஷப் பந்த் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் தினேஷ் தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் தினேஷ் களமிறங்குவது உறுதியாகிவிட்டது. அதன்படி தற்போது உத்தேச ப்ளெயிங் 11 பட்டியல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்திய உத்தேச லெவன் அணி:
ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் டேல், அக்சர் படேல், யுஸ்வேந்திர சஹால், பும்ரா, தீபக் சாஹர்.