97% பேர் டிஸ்சார்ஜ், 1.4% பேர் பலி – இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு!!

0

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா பரவல்

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி மக்களை சற்று ஆறுதல்படுத்தியுள்ளது. தற்போது கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரமாக குறைந்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.55 லட்சத்தை தாண்டியள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாகத்தான் காணப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, இறப்பு வீதம் ஆகியவற்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,121 ஆக உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09,25,710 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் 81 பேர் பலியாகியுள்ள நிலையில் இறப்பு வீதம் 1,55,813 ஆக அதிகரித்துள்ளது.

பாஸ்டேக் வசூல் முறை இன்று முதல் அமல் – தவறினால் இருமடங்கு கட்டணம்!!

நேற்று மட்டும் கொரோனா தொற்றிலிருந்து 11,805 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,06,33,025 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் 1,36,872 பேர் உள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 97.32% ஆக உயர்ந்தும், உயிரிழந்துள்ளவர் விகிதம் 1.43% குறைந்தும் உள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் விகிதமும் 1.25% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 87,20,822 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here