242 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி – நியூஸிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சொதப்பும் இந்திய பேட்ஸ்மேன்கள்..!

0

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான பார்ம் இந்த போட்டியிலும் தொடர்கிறது.

என்ன ஆனது விராட் கோஹ்லிக்கு..?

இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி சமீபகாலமாக மோசமாக பேட்டிங் செய்து வருகிறார். கடைசியாக அவர் ஆடிய 5 சர்வதேச போட்டிகளில் 3, 19, 2, 9, மற்றும் 5 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதனால் இந்திய அணியின் பலம் பெரிதளவில் குறைந்துள்ளது. நியூஸிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் விராட் கோஹ்லி 3 ரன்களுக்கு சவுத்தி பந்தில் வெளியேறினார்.

242 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்திய அணியில் பிரிதிவி ஷா (54), புஜாரா (54), விஹாரி (55) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் 63 ஓவர்களில் இந்திய அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூஸிலாந்து அணியின் ஜேமிசன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here