தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2015ம் ஆண்டு நடத்திய குரூப் 1 முறைகேடு தொடர்பாக தற்போது பணியில் உள்ள 60 அரசு அதிகாரிகள் மீது டிஎன்பிஎஸ்சி வழக்கு தொடர்ந்து உள்ளது.
75 காலியிடங்களுக்கு 65 பேர் சென்னையில் இருந்து..!
2015ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வில் பெருமளவு முறைகேடு நடைபெற்றது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக தற்போது பணியில் உள்ள 60 அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
குரூப் 1 தேர்வு மொத்தம் 75 காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டது. ஆனால் சென்னையில் உள்ள இரண்டு மையங்களில் இருந்து மட்டும் 65க்கும் மேற்பட்ட நபர்கள் தேர்வானது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்டவர்கள் தற்போது டிஎஸ்பி மற்றும் சப் கலெக்டர் போன்ற பணிகளில் உள்ளனர்.
வழக்குப்பதிவு செய்ய ஆணை..!
குரூப் 1 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு தொடர தமிழக உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதனால் தற்போது பதவியில் உள்ள பல அதிகாரிகள் சிக்குவர் என கூறப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |