அயர்லாந்து சென்றுள்ள இளம் இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாட திட்டமிட்டிருந்தது. இதன்படி, இந்த டி20 தொடரின் முதல் போட்டி நேற்று மலாஹிட் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சர்வதேச இந்திய அணியில் ரிங்கு சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா தங்களது அறிமுக ஆட்டத்தை விளையாடினர். இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் புதிய கேப்டன் பும்ரா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்திருந்தனர். இதில், பும்ரா, பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இதனை தொடர்ந்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 6.5 ஓவரில் 47 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த நிலையில், மழை குறிக்கிட்டதன் மூலம் DLS முறைப்படி 6.5 ஓவரில் 45 ரன்கள் எடுத்தால் வெற்றி என அறிவிக்கப்பட்டது. இதனால், இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், இந்திய அணி 1-0 என தொடரை வெல்ல முன்னிலையில் உள்ளது.