#INDvsENG டி 20 தொடர் நாளை துவக்கும் – பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து??

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான டி 20 தொடர் நாளை அஹமதாபாத் மைதானத்தில் துவங்குகிறது. டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் டி 20 தொடரில் இந்திய அணிக்கு இங்கிலாந்து பதிலடி கொடுக்குமா என்பது விரைவில் தெரியவரும்.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி முதலாவதாக டெஸ்ட் தொடரை விளையாடியது. இதில் இங்கிலாந்து அணி 1-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்குமான 5 போட்டிகளை கொண்ட டி 20 தொடர் நாளை அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டியில் பதிலடி கொடுக்க இங்கிலாந்தும், இங்கிலாந்தை வீழ்த்தும் நோக்கில் இந்தியாவும் களமிறங்குவதால் இந்த தொடர் மிக கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்திய அணியில் ரோஹித் உடன் யார் களமிறங்குவார் என்பதில் போட்டி இருக்கும். தவானுக்கு முக்கியத்துவம் அளித்தால் ராகுல் இடம் பெறமாட்டார். அதேபோல் சூரியகுமார் யாதவ் இதில் களமிறங்க வாய்ப்புள்ளது. அவர் களமிறங்கினார் ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு இருக்காது. அதேபோல் ரிஷாப் மிடில் ஆர்டரிலும் , ஹர்டிக் ஆல் ரவுண்டராகவும் இருப்பர். மேலும் பந்துவீச்சில் நீண்ட இடைவெளிக்கு பின்பு புவனேஷ்வர் களமிறங்குகிறார். சூழலில் சஹால் கண்டிப்பாக இடம்பெறுவர். மற்றொரு வீரராக அக்சர் அல்லது சுந்தர் இடம் பிடிக்கலாம்.

‘குக் வித் கோமாளியில் கலந்து கொள்ள மாட்டேன்’ – மணிமேகலை அதிர்ச்சி தகவல்!!

இங்கிலாந்து அணியும் மார்கன் தலைமையில் மிக வலிமையாக காணப்படுகிறது. டி 20 தரவரிசையில் இங்கிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது. மேலும் அந்த அணியில் உலக தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளார்கள். எனவே இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்துவதற்கு கடுமையாக போராட வேண்டும். கடைசியாக இந்த இரு அணிகள் விளையாடிய 14 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 7 முறை தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here