அடுத்த மாதம் தொடக்கத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி சென்னையில் வைத்து டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. இதனை முன்னிட்டு இந்தியா அணி வீரர்கள் 3 பேர் முதற்கட்டமாக சென்னை வந்துள்ளனர்.
இந்தியா vs இங்கிலாந்து:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டி, 5 டி 20 மற்றும் 3 ஒரு நாள் தொடரை பங்கேற்கவுள்ளது. இதில் முதற்கட்டமாக டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியும் சென்னையில் வைத்தும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியும் அஹமதாபாத்தில் வைத்தும் நடைபெறும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. தற்போது அடுத்த மாதம் 5ம் தேதி முதல் டெஸ்ட் தொடர்கள் தொடங்க உள்ளது. மேலும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியின் வீரர்கள் பட்டியலை ஏற்கனவே அறிவித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னை வந்த இந்தியா வீரர்கள்:
மேலும் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா அணியின் 3 வீரர்கள் தற்போது சென்னை வந்துள்ளனர். முதற்கட்டமாக ரோஹித் சர்மா, ரஹானே மற்றும் தாகூர் சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்த இவர்கள் முதல் 6 நாட்களுக்கு தனிமை படுத்த உள்ளனர். மேலும் விராட் கோஹ்லியும் இன்று சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளை நிற உடையில் இடுப்பலகை காட்டி போஸ் கொடுத்த லாஸ்லியா – சொக்கிப்போன ரசிகர்கள்!!
அதுமட்டுமல்லாமல் இலங்கை தொடரை முடித்துவிட்டு இங்கிலாந்து அணியினரும் இன்று சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு வந்த பின்னர் அவர்கள் சென்னையில் உள்ள ஹோட்டல் லீலா பாலசில் தங்கவைக்கப்படவுள்ளனர். மேலும் அவர்கள் அனைவரும் ஹோட்டலில் வைத்து 6 நாட்களுக்கு தனிமைப்படுத்த பட உள்ளனர். மேலும் வரும் 2ம் தேதி முதல் வீரர்கள் பயிற்சியை தொடங்கவுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.