இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது.
இந்தியா vs இங்கிலாந்து:
இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் இதில் இரு அணிகளும் தலா 1 முறை தங்களது வெற்றியை பதிவு செய்து அசதியுள்ளனர். தற்போது இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் அஹமதாபாத் மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. இந்த மைதானம் உலகிலேயே பெரியது என்ற சிறப்பு அம்சத்தை கொண்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஒரே நேரத்தில் சுமார் 1,10,000 பேர் அமர்ந்து பார்க்கும் தன்மையை உடையது. மேலும் இந்த போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுவதால் ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த போட்டிக்காக பிங்க் நிற பந்துகளை பயன்படுத்துவார்கள். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆதிக்கத்தை செலுத்திய இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்க படுகிறது. ஆனால் முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இரண்டாவது போட்டியில் சொதப்பிய இங்கிலாந்து அணியில் பல மாற்றங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97% உயர்வு – சுகாதாரத்துறை தகவல்!!
தற்போது இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 24ம் தேதி அதாவது நாளை மறுநாள் துவங்க உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணி அளவில் துவங்கும் என்று தெரிவித்துள்ளனர். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.