ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள மக்களுக்கு சலுகை தொகுப்பு – மத்திய அரசு ஆலோசனை.!

0
ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள மக்களுக்கு சலுகை தொகுப்பு - மத்திய அரசு ஆலோசனை.!
ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள மக்களுக்கு சலுகை தொகுப்பு - மத்திய அரசு ஆலோசனை.!

நாடெங்கிலும் கொரோனா பீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். மேலும் வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க மேலும் ஒரு சலுகை தொகுப்பை அறிவிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

சலுகைகள்:

ஊரடங்கால் ஏற்படும் பாதிப்பில் இருந்து வரி செலுத்துவோருக்கும், வர்த்தகத் துறையினருக்கும் நிவாரணம் அளிப்பதற்காக, ஊரடங்கு அறிவிப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.  2 நாட்கள் கழித்து, ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள சலுகைகளை அவர் அறிவித்தார்.

இருப்பினும், அது போதாது, மற்றொரு நிவாரண தொகுப்பு அறிவிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, கொரோனா ஏற்படுத்திய பாதிப்பை தணிக்கவும், பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டவும் மேலும் ஒரு நிவாரண தொகுப்பை அறிவிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

மத்திய அரசு:

மத்திய அரசின் மேலதிகாரி இதைப்பற்றி கூறியதாவது, “ஊரடங்கு விலக்கப்பட்டதற்கு பிந்தைய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக, இந்த சலுகைகளை பரிசீலித்து வருகிறோம். நுகர்வை அதிகரிப்பதுதான் இதன் முக்கிய நோக்கம். ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ஊரடங்கு விலக்கப்பட்டதற்கு பிந்தைய சூழ்நிலைக்கு பொருத்தமாக பல்வேறு நல்வாழ்வு திட்டங்கள் மற்றும் இதர அரசு திட்டங்களை மாற்றி அமைப்பது பற்றி யும் ஆலோசனை நடத்தினோம். கல்வி உதவித்தொகை, குறுவை சாகுபடி ஆகியவை தொடர்பான அறிவிப்புகள், எங்கள் பரிசீலனை பட்டியலில் உள்ளன. ஒன்றன்பின் ஒன்றாக தீர்வு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here