இத்தாலியில் குறையும் கொரோனா உயிர் இழப்புகள் – ஐரோப்பா நாடுகளில் அதிகரிக்கும் நம்பிக்கை..!

0

இத்தாலியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு பின்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை முதல்முறையாகக் நேற்று குறைந்துள்ளது.  இதனால் மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை பிறந்து உள்ளது.

இத்தாலியில் மோசமான தாக்கம்..!

கொரோனா வைரசால் தாக்குதலில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரதானமானது இத்தாலி. அங்கு கொரோனா வைரசால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1.30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்துவரும் பாதிப்புகள்..!

கடந்த 2 வாரங்களுக்கு முன் மார்ச் 19 ம் தேதி மிகக்குறைவாக 427 பேர் உயிரிழந்திருதார்கள். அதன்பின் நேற்று  525 பேர் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் இதுவரை 21 ஆயிரத்து 815 பேர் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனார்கள்.

இத்தாலியின் தேசிய சுகாதார நிறுவனத்தின் இயக்குநர்..!

சில்வியோ புராசாபேரோ நிருபர்களிடம் கூறுகையில் இத்தாலியில் கடந்த சில நாட்களா உயிரிழப்புகள் வீதம் குறைந்துள்ளது. தொடர்ந்து இதுபோல் இறப்புகள் வரும் நாட்களில் குறைந்து வந்தால் ஊரடங்கை தளர்த்தும் அடுக்கட்ட நடவடிக்கையை பற்றி சிந்திக்கத் தொடங்குவோம் எனத் தெரிவித்தார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here