தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் நிக்கி கல்ராணி தில்லுக்கு துட்டு 2 படத்தில் நடித்து வரும் நிலையில் யாரும் நடிக்க தயங்கும் படங்களில் நடித்து வருகிறார். இதனால் மிர்ச்சி சிவா அவரை பாராட்டி பேட்டியளித்துள்ளார்.
இடியட்:
தமிழில் தில்லுக்கு துட்டு திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதை அடுத்து இயக்குனர் ராம் பாலா நிக்கி கல்ராணி மற்றும் மிர்ச்சி சிவாவை வைத்து இடியட் படத்தை இயக்கி வருகிறார். ஸ்க்ரீன் சீன் மீடியா இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் லாக்டவுன் சமயத்தில் தான் இந்த திரைப்படத்தின் கதையை நாயகன் நாயகியிடம் கூறியிருக்கிறார் இயக்குனர்.
இப்பொழுது பத்திரிகையாளர்களிடம் பேசிய சிவா இந்த திரைப்படத்தை பற்றி பல விஷயங்களை கூறியுள்ளார். அதுவும் நிக்கி கல்ராணி பற்றி ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளியுள்ளார் சிவா. அதாவது இந்த படம் ஹாரார் திரைப்படமாம்.
வித்தியாசமான கான்செப்ட்டில் கதை உருவாகி வருகிறதாம். மேலும் நிக்கி கல்ராணி இதில் ஒரு காட்சியில் பிணமாக நடிக்க இருந்தாராம். அதற்கு பலரிடம் சந்தேகம் கேட்டு தத்ரூபமாக நடித்திருந்தாராம். அந்த அளவிற்கு நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் என்று கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.