சிவாவை ஜெயிலுக்கு அனுப்புவதாக மிரட்டும் இன்ஸ்பெக்டர் – சூடுபிடிக்கும் “இதயத்தை திருடாதே” சீரியல்!!

0

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியலில் தற்போது சஹானா வீட்டில் உள்ள அனைவரையும் சொல்லாமல் கொள்ளாமல் கோவிலுக்கு அழைத்து செல்கிறார். இதனால் மொத்த குடும்பமும் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதயத்தை திருடாதே தொடர்

அனைத்து டிவி தொலைக்காட்சிகளுக்கு மக்களுக்கு பிடித்த வகையில் சீரியல்களை தயாரிப்பதில் தான் தற்போது முனைந்து வருகின்றனர். அந்த வகையில் மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியல் என்றால் அது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியல் தான். இன்று சஹானா அனைவரையும் சொல்லாமல் கொள்ளாமல் கோவிலுக்கு அழைத்து செல்கிறார். குடும்பத்தில் உள்ள அனைவரும் எதற்காக கோவிலுக்கு வந்துள்ளோம் என்று கேட்பதற்கு சஹானா ஒரு காரணத்திற்காக தான் என்று கூறிவிடுகிறார்.

மணக்க மணக்க கிராமத்து “கோழி கறி குருமா” – செஞ்சு அசத்துங்க!!

பின், கோவிலுக்கு சென்று விட்டு சஹானா பூஜைகளை செய்து விட்டு அங்கபிரதட்சணம் செய்ய ஆயத்தமாகிக்கிறார். இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது. 7 முறை சஹானா அங்கபிரதட்சணம் செய்கிறார். இதனால் கோபம் கொள்ளும் சிவா எதற்காக இப்படி செய்கிறாய் என்று சஹானாவை தனிமையில் அழைத்து கேட்கிறார். அதற்கு சஹானா டான்ஸ் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்திற்காக தான் இவ்வாறு ஒரு வேண்டுதலை வைத்தேன் என்று கூறிவிடுகிறார்.

எச்சரிக்கை விடுக்கும் இன்ஸ்பெக்டர்

அதே போல் நம் குடும்பம் தாட்சயினி முன்பு நன்றாக வாழ வேண்டும் என்பதற்காகவும் தான் என்றும் தெரிவிக்கிறார். இதனால் சிவா மகிழ்ச்சி அடைகிறார். இதனை அடுத்து அனைவரும் புது வீட்டிற்கு செல்கின்றனர். அப்போது யாரும் எதிர்பாரா வண்ணம் பவானி சஹானாவை நன்றாக கவனித்து கொள்கிறார். இதனால் அனைவருக்கும் சந்தோசம் தான் என்றாலும், அனைவருக்கும் அவரது இந்த புதிய மாற்றம் நெருடுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது மட்டுமின்றி இன்ஸ்பெக்டர் வெற்றி சிவாவின் வீட்டிற்கு வந்து அவருக்கு பரிசு கொடுத்து விட்டு கூடிய விரைவில் சிவா ஜெயிலுக்கு அழைத்து செல்லப்படுவார் என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தது விட்டு செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here