அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவு என்றால் அது, சிக்கன் தான். அந்த வகையில் தற்போது அனைவரும் சுலபமாக செய்ய கூடிய வகையிலான கிராமத்து ஸ்டைல் “சிக்கன் குருமா” குறித்து இந்த பதிவில் காணலாம்..!!
தேவையான பொருட்கள்
- தேங்காய் – 1/2 கப்
- பச்சை மிளகாய் – 4
- முந்திரி – 2 டீஸ்பூன்
- சோம்பு – 3 டீஸ்பூன்
- கசகசா – 2 டீஸ்பூன்
- பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
- ஏலக்காய் – 4
- கிராம்பு – 4
- இலவங்கப்பட்டை – 2
- இஞ்சி – 2
- பூண்டு – 6
- ஏலக்காய் – 4
- கிராம்பு – 6
- பச்சை மிளகாய் – 4
- வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
- உருளைக்கிழங்கு – 4
- கருவேப்பில்லை – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
- சிக்கன் – 1/2 கிலோ
செய்முறை
முதலில், ஒரு சட்டியினை காய வைத்து அதில் எண்ணெய் ஊற்றாமல் எடுத்து வைத்திருக்கும் கசகசாவை சேர்க்க வேண்டும். பின், அதனை மிக்ஸியில் போட்டு அதில் பச்சை மிளகாய், முந்திரி, இஞ்சி & பூண்டு, தேங்காய் துருவல், சோம்பு ஆகியவற்றை சேர்ந்து நன்றாக அரைக்க வேண்டும்.
‘மூக்கில் விரல்வைக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளோம்’ – இபிஎஸ்-ஓபிஎஸ் பெருமிதம்!!
பின், சட்டியினை காய வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் எடுத்து வைத்துள்ள பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். நன்றாக இது வதங்கியதும் அதில் வெங்காயம் சேர்க்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் தக்காளி மற்றும் எடுத்து வைத்துள்ள கலவையினை சேர்க்க வேண்டும். பின், உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கடைசியாக, இந்த கலவையில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். இதில் சிக்கனை சேர்த்து நன்றாக கிண்டி விட வேண்டும். நன்றாக கொதித்ததும் கடைசியாக கொத்தமல்லி மற்றும் கருவேப்பில்லை போட்டு இறக்கி வைக்க வேண்டும்.