2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த டி-20 கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதுக்கு தேர்வாகியுள்ளோரை ICC அறிவித்துள்ளது.
ICC Award
T20, ODI, டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளையாடும் வீரர்களை தேர்வு செய்து ஒவ்வொரு வருடமும் ICC கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற T20 போட்டிகளில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடியதன் மூலம் சிறந்த டி-20 கிரிக்கெட்டர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு மட்டும் 31 T20 போட்டிகளில் விளையாடி 1164 ரன்கள் எடுத்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதில் 68 சிக்ஸர்கள் உட்பட இரண்டு சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்கள் விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஐசிசி டி-20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ICC- யின் சிறந்த அசோசியேட் விருது அறிவிப்பு.., தட்டிச் சென்ற முக்கிய வீரர்கள்!!!
இதே போல் பெண்களுக்கான சிறந்த டி-20 கிரிக்கெட்டர் விருதுக்கு ஆஸ்திரேலியாவின் தஹ்லியா மெக்ராத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற T20 போட்டிகளில் 435 ரன்கள் குவித்து 13 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.