நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் நடித்து வரும் கிரிமினல் படத்தை குறித்து ஒரு முக்கிய அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகர் கவுதம் கார்த்திக்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக ஜொலித்து வருபவர் தான் நடிகர் கவுதம் கார்த்திக். அந்த வகையில் இவர் நடித்த கடல், வை ராஜா வை போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுடன் சேர்ந்து பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார் கவுதம் கார்த்திக்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படம் வருகிற மார்ச் மாதம் 30 தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டனர். சமீபத்தில் தனது ஆசை காதலியான மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர் அடுத்து நடிக்க இருக்கும் கிரிமினல் படத்தை குறித்து ஒரு முக்கிய அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நெட்டிசன்களின் ட்ரோலுக்கு அஞ்சாத நாயகி ராஷ்மிகா.., இணையத்தில் வெளியிட்ட வீடியோ!!!
அதாவது நடிகர் கவுதம் கார்த்திக் கிரிமினலாகவும், நடிகர் சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் கிரிமினல் படத்தின் ஷூட்டிங் ஜனவரி 23ம் தேதி மதுரையில் தொடங்கியது. மேலும் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, தக்ஷிண மூர்த்தி என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார்.