கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை, முதல் அலையை விட மிக அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இதுகுறித்து மருத்துவர்கள் தொடர்ந்து தங்களது வேதனையை தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா உயிரிழப்பு:
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதுவரை கண்டிராத வகையில் இந்தியா தற்போது மிக கடுமையான நாட்களை சந்தித்து வருகிறது. காரணம் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் அதிகமாக ஓர் வைரஸ் தொற்றினை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் இந்தியா திணறி வருகிறது. தற்போது இந்த கொரோனா பேரிடர் காலத்தில் பல தரப்பு மக்கள் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். மேலும் கொரோனா நோயாளிகளுக்கும் மருத்துவமனைகளில் சேர்வதற்கான இடமுமில்லை.அந்த அளவிற்கு கொரோனாவின் தாக்கம் நாட்டில் காணப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. அவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு கூட தற்போது நாட்டில் இடம் இல்லாத அவல நிலையை இந்தியா சந்தித்து வருகிறது.
கொரோனாவை வென்ற 96 வயது மூதாட்டி
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் தற்போது இதுகுறித்து மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் அனிர்பன் பிஸ்வாஸ் மனமுடைந்து தனது வேதனையை தெரிவித்துள்ளார்.அவர் தனது முகநூல் பக்கத்தில் லைவில் இருந்த போது கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க முடியாதது வேதனை அளிக்கிறது, மேலும் மருத்துவமனைகளில் 100 முதல் 10,000 வரை படுகைகளை சேர்ப்பதற்கான நிலை தற்போது இல்லை, நோயாளிகள் உயிரிழப்பதை காண்பது மனம் வலிக்கிறது என்று கண்ணீர் மல்க தனது வேதனையை தெரிவித்துள்ளார்.