இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா நோய்த்தொற்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து வயதினரையும் பாதித்து வருகிறது. இந்நிலையில் தற்போது டெல்லியில் 96 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.
டெல்லி:
இந்தியாவில் தமிழகம், கேரளா, மராட்டியம், கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சில மாநிலங்களில் மிக கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.கொரோனா நோய்த்தொற்றிற்கு அனைத்து வயதினரும் பாதிக்கப்பட்டு வருவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு சில பகுதியில் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மூத்த வயதினர் குணமடைந்து வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இது மற்ற நோயாளிகளுக்கு சற்று தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது என்றே சொல்லலாம்.தற்போது அந்த வகையில் டெல்லியில் 96 வயதான புஷ்பா சர்மா என்னும் மூதாட்டி கடந்த மாதம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் கொரோனா தொற்றில் இருந்து சுமார் ஒரு மாதத்திற்கு பின்பு அவர் முழுவதுமாக மீண்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இவருக்கு கடந்த 9ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.