சென்னையில் உள்ள மடிப்பாக்கம் பெரியார் நகரில் கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவனின் மீது பெட்ரோல் ஊத்தி எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மனைவின் வெறிச்செயல்:
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் பாண்டி (42). அவரது மனைவி பார்வதி (34). கணவர் பாண்டி இஸ்திரி போடும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பார்வதிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. தற்போது அதை அறிந்த பாண்டி தன் மனைவி பார்வதியை கண்டித்துள்ளார். ஆனால் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் பார்வதி அந்த நபருடன் இருந்த உறவை தொடர்ந்துள்ளார்.இதனால் கணவன், மனைவிக்கு இடையில் அடிக்கடி சண்டைகள் வந்துள்ளன. கள்ளக்காதலை விட மனமில்லாத பார்வதி ஒரு கட்டத்தில் தன் கணவனான பாண்டியை கொன்று விட்டு கள்ளக்காதலனுடன் சேர முடிவு செய்தார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நேற்று முன்தினம் மாலை கணவன் வீட்டில் தூங்கியபோது, அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு அறையின் வெளி கதவை பூட்டியுள்ளார்.உடல் முழுவதும் தீப்பற்றிய பாண்டி அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து அவரை அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். எழும்பூர் நீதிமன்ற நடுவர் மருத்துவமனையில் இருந்த பாண்டியிடம் வாக்கு மூலம் வாங்கினார். அதில் அவர் மனைவி பார்வதி தன்னை பெட்ரோல் ஊத்தி எறித்தகாத கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பாண்டி இறந்து விட்டார். மேலும் அவர் மனைவி பார்வதி மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.